அருண தர்ஷன தகுதி நீக்கம்!
இந்நாட்டு நேரப்படி நேற்றிரவு இடம்பெற்ற பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் குழு 2 அரையிறுதி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.
எவ்வாறாயினும், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11.05 மணிக்கு இடம்பெற்றது.
அருண தர்ஷன போட்டித் தூரத்தை 44.75 செக்கன்களில் முடித்து 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.
இது அவரது தனிப்பட்ட சிறந்த ஓட்டமாக பதிவாகியிருந்த நிலையில், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அருண தர்ஷன தகுதி நீக்கம்!
Reviewed by Author
on
August 07, 2024
Rating:
Reviewed by Author
on
August 07, 2024
Rating:


No comments:
Post a Comment