அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சமரிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

 ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகிறது.

அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

அதன்படி, ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளைகளில் இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரும் இந்திய மகளிர் அணியை சேர்ந்தவர்களாவர்.

அதன்படி, இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசியின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து இவர்களுக்கு வாக்களிக்க முடியும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.




இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சமரிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் Reviewed by Author on August 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.