உணவு கொடுத்த இத்தாலியப் பெண்ணின் கையை கடித்த குரங்கு
வில்பத்து தேசிய வனத்தில் குரங்கு ஒன்று இத்தாலியப் பெண் ஒருவரின் கையை கடித்துக் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இத்தாலியப் பெண் வில்பத்து தேசிய வனத்தில் விலங்குகளுக்கு உணவுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு இருந்த குரங்கு ஒன்று இவரது கையை கடித்து இவரது கையிலிருந்த வாழைப்பழத்தைப் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காயமடைந்தவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு கொடுத்த இத்தாலியப் பெண்ணின் கையை கடித்த குரங்கு
Reviewed by Author
on
August 06, 2024
Rating:

No comments:
Post a Comment