அண்மைய செய்திகள்

recent
-

மூன்று வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த உறவினரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபரான உறவினர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மறுநாள் சிறுமியின் பாட்டி சிறுமியைக் குளிப்பாட்டுவதற்காக அழைத்துச் சென்ற போது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

பின்னர், சிறுமியின் பாட்டி இது தொடர்பில் புலஸ்திகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலஸ்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






மூன்று வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் Reviewed by Author on September 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.