கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பலி
கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமாள்புரம், வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று (05) நண்பகல் இடம் பெற்ற இச்சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பலி
Reviewed by Author
on
December 06, 2024
Rating:
.jpg)
No comments:
Post a Comment