சிறப்பாக இடம் பெற்ற மன்னார் நகர சபையின் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வு-போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.
'வளமான நாடும் அழகான வாழ்க்கையும்' எனும் தொனிப்பொருளில் 'மறுமலர்ச்சி நகரம்' உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வு புதன்கிழமை(24) மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
சர்வமத தலைவர்கள் பங்குபற்றுதல் களுடன் மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன் மற்றும் மன்னார் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ம.சாந்தசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார் நகர சபை உறுப்பினர்கள்,பணியாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வுகள் இடம் பெற்ற தோடு,இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் நகர சபையின் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வு-போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.
Reviewed by Vijithan
on
September 25, 2025
Rating:

No comments:
Post a Comment