ஓமந்தையில் ரயில் மோதி காலை இழந்த நபர்
ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதி குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஓமந்தையில் ரயில் மோதி காலை இழந்த நபர்
Reviewed by Vijithan
on
September 23, 2025
Rating:

No comments:
Post a Comment