கோலாகலமாக ஆரம்பமான மன்னாரின் சமர் 2025
மன்னார் மண்ணில் முதல் முறையாக பிரசித்தி பெற்ற மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மற்றும் மன் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரிகளுக்கு இடையில் கடின பந்து போட்டிகள் மன்னார் மண்ணிலும் கிரிக்கெட் விளையாட்டில் மாணவர்கள் வளர்ச்சி பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இன்று மன்னாரின் சமர் ஆரம்பமானது
கிரிக்கெட்டை நேசிக்கும் மக்கள் புடைசூழ மன்னார் பொது விளையாட்டு அரங்கில் இரு பாடசாலை மாணவ மாணவி நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,அரச திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், நலன் விரும்பிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment