அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய 4 பேர் அடையாளம்!
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டார்.
"இந்தக் குற்றவாளிகள் பயணித்ததாகக் கூறப்படும் வாகனம் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக ஊடகங்களில் எவ்வளவு தகவல்கள் வெளியானாலும், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே நாம் இதனை உறுதிப்படுத்துவோம். எமக்கு அவ்வாறு தோன்றினாலும், இது 100 வீதம் அந்த வாகனம் தான் என்று எம்மால் கூற முடியாது.
இந்தச் சம்பவத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மாத்திரம் தொடர்புபடவில்லை. இதில் தொடர்புடைய இன்னும் பல நபர்கள் உள்ளனர். இது தொடர்பாக நான்கு நபர்கள் குறித்து எமக்கு வெற்றிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு வருவதற்கு முன்னரும் மற்றுமொரு தகவல் கிடைத்தது. இன்னும் ஒரு சில நாட்களில் இதனைத் தீர்க்க முடியும் என நம்புகிறோம்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். சட்டத்தரணி தொடர்பாக பொலிஸார் என்ற ரீதியில் நாம் எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
சில விடயங்கள் ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டன. நாம் அந்தத் தகவல்களை 100 வீதம் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. இந்த விசாரணை நடவடிக்கைகள் மிகவும் நுணுக்கமானவை. தற்போது பெருமளவிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
வெளியிடக்கூடிய விடயங்களை மாத்திரமே நான் வெளியிடுகிறேன். சில விடயங்களை வெளியிட்டால், அது விசாரணைக்குத் தடையாக அமையலாம்.
சில விடயங்களை நாம் நிராகரிக்கவில்லை, அவை உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். ஒரு சட்டத்தரணி எந்தவொரு குற்றவாளிக்காகவும் நீதிமன்றில் முன்னிலையாக முடியும்.
அவர் முன்னிலையான வழக்குகள் குறித்து நாம் விசாரணை நடத்தி வருகிறோம். குறித்த சட்டத்தரணி குறிப்பிட்ட சந்தேகநபருக்காக அல்லது குற்றவாளிக்காக முன்னிலையாவது குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தவில்லை என்று எம்மால் நேரடியாகக் கூற முடியாது.
இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவடைந்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட பின்னரே நாம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும்." என்றார்.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய 4 பேர் அடையாளம்!
Reviewed by Vijithan
on
February 15, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 15, 2026
Rating:


No comments:
Post a Comment