வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அக்குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்றின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்வு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, இக்குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், அந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது வினைத்திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பிள்ளைகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நன்னடத்தைப் பாதுகாப்பிலுள்ள பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வு மார்க்கங்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
Reviewed by Vijithan
on
February 15, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 15, 2026
Rating:


No comments:
Post a Comment