பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை
வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைப் பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 37 வயதுடைய ஒருவராவார்.
விபத்துக்குள்ளான நபர் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ உள்ளிட்ட வைத்தியக் குழுவினர், அந்த இரும்புக் கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, காயமடைந்தவரை அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், வைத்தியர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது, உடலினுள் இருந்த இரும்புப் பகுதிகளை முழுமையாக அகற்றியுள்ளனர்.
முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்கச் சென்றபோது கிளை முறிந்ததால், இந்த நபர் அங்கிருந்த கொன்க்ரீட் மதில் ஒன்றின் மீது விழுந்துள்ளார். இதன்போது மதிலில் இருந்த இரும்புக் கம்பி ஒன்று அவரது உடலைப் துளைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை
Reviewed by Vijithan
on
March 23, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 23, 2026
Rating:


No comments:
Post a Comment