அண்மைய செய்திகள்

recent
-

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம்

 இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

 

 "நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் அவதானத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது போல் அமைந்துள்ள அந்தச் செய்தி, எவ்வகையிலும் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டது அல்ல என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 

பொலிஸார் தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு ஏதேனும் அறிவித்தல் விடுக்கப்படுவதாயின், அது பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ் ஊடகங்களுக்கு அறிக்கையாகவே வெளியிடப்படும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அத்துடன், அவர்களின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் தளம் வாயிலாகவும் அன்றாட உத்தியோகபூர்வ செய்திகள் புதுப்பிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

பொலிஸ் இலச்சினை அல்லது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்புவது ஏதேனும் திட்டமிட்ட செயலா என்பது குறித்து கண்டறிய ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 

எனவே, சமூக வலைதளங்களில் பரவும் இவ்வாறான பதிவுகள் குறித்து அவதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.






சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம் Reviewed by Vijithan on March 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.