அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகள் மீட்பு

 கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (3) அதிகாலை 3.00 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகள் மீட்பு Reviewed by Vijithan on April 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.