அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு முன்னெடுப்பு

 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம்  நாளான இன்று வியாழக்கிழமை (14)  மன்னார்  நானாட்டான் பகுதியில் நினைவு  அனுஷ்டிக்கப்பட்டது.


 இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின்  ஏற்பாட்டில் நானாட்டான் பகுதியில் இன்று வியாழக்கிழமை (14) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.


 இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு  அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது.


இதன் போது மத தலைவர்கள் மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.


கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.


அதே போன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.      


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம்  நாள் நினைவேந்தல் இன்று மூன்றாம் நாள் நினைவேந்தல்  மன்னாரில்  முன்னெடுக்கப்பட்டது.














இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு முன்னெடுப்பு Reviewed by Vijithan on May 14, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.