சிறைச்சாலை பேருந்தை காணொளி பதிவு செய்த பெண் கைது
உடுகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சந்தேகநபர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பேருந்து ஒன்றை தனது கைத்தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி பதிவு செய்து கொண்டிருந்த பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்று, தனது கைத்தொலைபேசியை மறைத்து வைத்துக்கொண்டு இரகசியமாக இந்தச் சிறைச்சாலை பேருந்தைக் காணொளி பதிவு செய்துள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.
உடுகம பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏதேனும் குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் இவர் இவ்வாறு காணொளி பதிவு செய்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபரான பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் உடுகம முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Reviewed by Vijithan
on
July 31, 2026
Rating:


No comments:
Post a Comment