400 கிராம் தேயிலை பொதிக்காக 2 இலட்சம் ரூபாய் அபராதம்
காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 200,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்தமைக்காகத் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிராளி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 15.07.2026 அன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் எடையுள்ள தேயிலைப் பொதி ஒன்று 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 15.08.2014 திகதியிடப்பட்ட 1875/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 52 ஐ மீறியமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கட்டளை இலக்கம் 52 இன் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள் விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை எனக் கண்டறியப்பட்ட பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்தோ, அதற்கு அருகிலோ அல்லது அவற்றுக்கு மத்தியிலோ வைத்திருப்பது, சேமிப்பது அல்லது திரட்டி வைப்பது கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
400 கிராம் தேயிலை பொதிக்காக 2 இலட்சம் ரூபாய் அபராதம்
Reviewed by Vijithan
on
September 09, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 09, 2026
Rating:


No comments:
Post a Comment