அண்மைய செய்திகள்

recent
-

இரும்பு விலங்குடன் கால் கட்டப்பட்ட மனித எச்சம்.....மன்னார் மனித புதைகுழியில்....மக்கள் அதிர்ச்சி


மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பனியானது 112 வது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது

இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல உகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எச்சம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது இன்று மதியம் அளவில் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஒட்டு மொத்த மக்களையும் அதிர்சி அடைய செய்துள்ளது

இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எச்சங்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருத்ந்தனர்.

இந்த நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் என்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது

அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடைய பொருட்களும் மீட்க்கப்பட்டு வருகின்றது.

இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 266 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 260 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.




இரும்பு விலங்குடன் கால் கட்டப்பட்ட மனித எச்சம்.....மன்னார் மனித புதைகுழியில்....மக்கள் அதிர்ச்சி Reviewed by Author on December 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.