அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 500 ரூபாய் மண்ணென்னை பெறுவதற்கு மக்கள் அதிகாலையில் இருந்து காத்திருப்பு

மன்னார் பள்ளிமுனை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(29) மண்ணென்னை விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணென்னையை பெற்று வருகின்றனர் குறிப்பாக ஒவ்வெரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்கான மண்ணென்னைகளே வழங்கப்பட்டு வருகின்றன குடும்ப அட்டைகள் வழங்கப்படாத, இல்லாத நபர்களுக்கு கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின்னரே மண்ணென்னை வழங்கப்பட்டு வருகின்றது 

 மேலும் மண்ணென்னை விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாலரால் அப்பகுதியில் கடமையாற்றும் சமூர்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன் பொலிஸரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது








மன்னாரில் 500 ரூபாய் மண்ணென்னை பெறுவதற்கு மக்கள் அதிகாலையில் இருந்து காத்திருப்பு Reviewed by Author on May 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.