அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் விநியோகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை முல்லைத்தீவிலும் ஏற்பாடு

சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருளைப் பெறுவதற்குத் தேவைப்படும் சுகாதாரப் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே இன்று முதல் எரிபொருள் வழங்கப்படும்.

எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கமைய முல்லைத்தீவிலும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு சுகாதார ஊழியர்களுக்கான பதிவுகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு அவர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உ.உமாசங்கர் அவர்கள் தெரிவித்தார் இதேவேளை இன்று சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு அளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஏனைய பொதுமக்கள் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாமெனவும் கோரப்பட்டுள்ளது


எரிபொருள் விநியோகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை முல்லைத்தீவிலும் ஏற்பாடு Reviewed by Author on June 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.