அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் டெங்கு தொடர்பான வேலைத்திட்டம் திருப்திகரமானதாக இல்லை- மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி

மன்னார் மாவட்டத்தில் டொங்கு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் திருப்திகரமானதாக இல்லை என மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று  (5-11-2012) திங்கட்கிழமை டெங்கு தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்ற போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,


அண்மையில் பெய்த கடும் மழையினைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்குள் மன்னார் மாவட்டத்தில் 7 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் குப்பை அகற்றுதல்,வடிகான்கள் சீரமைத்தல்,கழவு நீர் வெளியேற்றுதல் போன்ற வேளைத்திட்டங்கள் உடனடியாக இடம் பெற வேண்டும்.ஆனால் மன்னாரில் டெங்கு தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற வேளைத்திட்டங்கள் தற்போது திருப்தியில்லாத நிலையில் அமைந்துள்ளது.
இதற்கு மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகள் அர்ப்பனிப்புடன் செயற்பட வேண்டும்.

குறித்த செயற்பாடுகள் திருப்தியில்லாமை குறித்த பாதீக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் எனக்கு முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நகர சபையும்,பிரதேச சபைகளும் கழிவுகளை அகற்றுதல்,கழிவு நீரை வெளியேற்றதல்,கழிவு நீர் கால்வாய்களை சீர் செய்தல் போன்ற பணிகளை துரிதப்படத்தும் பட்சத்தில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இதற்கு அணைவரும் ஒத்துளைப்புக்களை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் டெங்கு தொடர்பான வேலைத்திட்டம் திருப்திகரமானதாக இல்லை- மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி Reviewed by Admin on November 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.