சீரற்ற காலநிலை: 2 மீனவர் பலி, 15 பேரைக் காணவில்லை
மேலும் மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களைக் காணவில்லையெனவும், 8 வெறும் படகுகள் மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாகவே படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதேவேளை கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணமல் போயுள்ள மீனவர்களைத்தேடும் பணியில் கடற்படைப் படகுகள் ஈடுபட்டுள்ளன.
களுத்துறை மற்றும் பலபிட்டிய வரையான கடற்படப்பில் தேடல் பணிக்கென வை 12 விமானமொன்று உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
சீரற்ற காலநிலை: 2 மீனவர் பலி, 15 பேரைக் காணவில்லை
Reviewed by Admin
on
June 08, 2013
Rating:

No comments:
Post a Comment