அண்மைய செய்திகள்

recent
-

4 மாகாணங்கள், கரையோரங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நீடித்துக்கொண்டிருப்பதனால் நான்கு மாகாணங்களில் வாழ்வோருக்கும்  கரையோர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேல்,மத்திய ,தென் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலேயே இந்த காலநிலையின் தாக்கம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.    

அத்துடன், கரையோரங்களைச்சேர்ந்த மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கடலலையின் வேகம் அதிகரித்திருப்பதனால் மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கடும்காற்று மட்டுமன்றி மின்னல் தாக்கமும் அதிகரித்திருக்கும் என்றும் அந்நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மன்னார், பொத்துவில், காலி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்திருக்கும் என்றும் அந்நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

4 மாகாணங்கள், கரையோரங்களுக்கு எச்சரிக்கை Reviewed by Admin on June 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.