நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் காணாமல் போனோர் தொடர்பில் கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம்
நீண்ட காலமாக தொடரும் காணாமல் போனவர்களின் விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமையைக் கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
வடபகுதியிலிருந்து சுமார் 10 பஸ்களில் செல்லும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கள் பயணங்களைத் தொடர்கின்றனர்.
இராணுவத்தினராலும் ஏனைய தரப்பினராலும் காணாமல் செய்யப்பட்டவர்களின் உண்மை நிலை என்ன? அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை உரிமையைத் தாங்கள் எதிர்பார்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
தொடரும் காணாமல் போனவர்களின் விவகாரம் தொடர்பாக அரசும் ஜ.நாவும் தீர்கமான முடிவைத் தங்களுக்கு தெரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இச்த ஆர்பாட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் காணாமல் போனோர் தொடர்பில் கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம்
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:

No comments:
Post a Comment