அண்மைய செய்திகள்

recent
-

யாழில் இருந்து மன்னார் நோக்கி சென்ற தனியார் பஸ் தடம்புரண்டது: 30 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ் ஒன்று ஏ-32 வீதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் சுமார் 30 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

 நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்திற்கு வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் இருந்து மன்னார் நோக்கி சென்ற தனியார் பஸ் தடம்புரண்டது: 30 பேர் படுகாயம் Reviewed by Admin on August 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.