சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இருவர் கைது
ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் மூலம் இவர்கள் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கைள கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு வர்த்தகர்களையும் பொலிஸார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் நீர்கொழும்பு ஊடாக பத்து படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் நபர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சட்டவிரோத பயணத்திற்காக ஐந்து லட்ச ரூபா அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீர்கொழும்பைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு படகுகளையும் குறித்த வர்த்தகர்கள் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இருவர் கைது
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:

No comments:
Post a Comment