வவு. சுந்தரபுரம் பாடசாலை வளாகத்தில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!
சுந்தரபுரத்தைச் சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார்.
இவர் நேற்று வியாழக்கிழமை மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த சமயம் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை அவரை உறவினர்கள் தேடிய போதே பாடசாலை வளாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அக்கிராமத்தின் கிராமசேவையாளர் தெரிவித்தார்.
இவரது சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து மது போத்தல்கள் காணப்பட்டதாகத் தெரிவித்த கிராமசேவையாளர், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியைக் காணவில்லை என உறவினர்கள் தனக்கு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
இக் கொலை சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவு. சுந்தரபுரம் பாடசாலை வளாகத்தில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:

No comments:
Post a Comment