அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு - வவுனியா ரயிலில் பாய்ந்து ஏறிய பயணியின் கை துண்டிப்பு! கோட்டை ரயில் நிலையத்தில் சம்பவம்!

ஓடும் ரயிலில் பாய்ந்து ஏற முற்பட்ட இளைஞர் ஒருவர் தடுக்கி விழுந்ததில் ரயில் சில்லினால் அவரது கை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.

கொழும்பு – வவுனியா ரயிலில் ஏற முற்பட்ட போதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் வண்டி பயணிகள் ஏறுவதற்காக நிறுத்தப்படுவதற்கு முன்பே குறித்த இளைஞர் ஓடிச் சென்று ரயிலில் ஏற முற்பட்டுள்ளார்.

 சம்பவத்தில் குறித்த இளைஞனின் கை வேறாக துண்டிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் காயமடைந்த இளைஞனையும் துண்டிக்கப்பட்ட கையினையும் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

கொழும்பு - வவுனியா ரயிலில் பாய்ந்து ஏறிய பயணியின் கை துண்டிப்பு! கோட்டை ரயில் நிலையத்தில் சம்பவம்! Reviewed by Admin on August 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.