கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை இன்று
வடபகுதிக்கான ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் கீழ், கிளிநொச்சி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்புக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
வடபகுதிக்கான ரயில் மார்க்கத்தில் ஏற்கனவே ஓமந்தை வரை ரயில் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பிற்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகளை முன்னெடுக்கும் திட்டத்தின் கீழ், ரயில் பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை இன்று
Reviewed by Admin
on
August 29, 2013
Rating:
No comments:
Post a Comment