அண்மைய செய்திகள்

recent
-

வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 40 வீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் இ. ஜ. ஆ. சங்கம்

2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு- செலவுத் திட்­டத்தில் சகல அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும் 40 வீதம் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென இலங்கை ஜன­நா­யக ஆசி­ரியர் சங்கம், நிதித் திட்­ட­மிடல் அமைச்சின் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள திட்ட வரை­புக்­கான ஆலோ­ச­னைகள் அடங்­கிய மக­ஜரில் குறிப்­பிட்­டுள்­ளது.


இலங்கை ஜன­நா­யக ஆசி­ரியர் சங்கம் அனுப்பி வைத்­துள்ள மக­ஜரில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, எமது சங்­கத்தின் சார்பில் முன்­வைக்­கப்­படும் ஆலோ­ச­னைகள் 2014 ஆண்­டுக்­கான திட்ட வரைவில் சேர்க்­கப்­ப­டு­மாயின் அது இந்த நாட்­டி­னு­டைய பெரும்­பான்மை அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளான ஆசி­ரியர், அதிபர் ஆகி­யோ­ருக்கு ஒரு வரப்­பி­ர­சா­த­மாக அமையும்.

அந்த வகையில், பாட­சா­லை­களில் கட­மை­யாற்­று­கின்ற ஆசி­ரி­யர்கள், தேசிய இட­மாற்றக் கொள்­கைக்கு மாற்­ற­மாக இட­மாற்றம் பெற்­ற­வர்கள் அது சம்­பந்­த­மாக மேன்­மு­றை­யீடு செய்தால் அம்­மு­றை­யீட்­டினை இரண்டு வாரத்­துக்குள் பரி­சீ­லனை செய்து அல்­லது குறிப்­பிட்ட ஆசி­ரி­யரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி அவ்­வி­ட­மாற்­றத்­தினை உறுதி செய்தல்.


அதிபர் சேவை,ஆசி­ரியர் சேவை ஆகிய இரு சேவை­க­ளையும் தரம் 1, 2, 3 ஆகிய தரங்­க­ளாக தரப்­ப­டுத்­து­வ­துடன்,
அதிபர், ஆசி­ரி­யர்கள் 25வருட சேவைக்­கா­லத்தை பூர்த்தி செய்­தி­ருந்தால் 9 வீதம் ஓய்­வூ­தியம் வழங்­கு­வ­துடன் ஆசி­ரியர் சேவையில் ஆகக் குறைந்­தது 10 வருட கால சேவையைப் பூர்த்தி செய்­தி­ருப்பின் ஓய்­வு­நிலை பெறத் தகு­தி­ய­ுடை­யவ­ராக கரு­தப்­பட வேண்டும்.

 ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்­சையை ஏழாம் தரத்தில் நடாத்­து­வ­தற்கும் சிங்­கள மொழிப் பாட­சா­லை­களில் தமிழ் மொழியும் தமிழ் மொழி பாட­சா­லை­களில் சிங்­கள மொழியும் கற்­பிப்­ப­தற்­கான ஆசி­ரி­யர்­களை நிய­மிப்­ப­தோடு தரம் மூன்­றி­லி­ருந்து கற்­பிக்­கப்­ப­டுதல் வேண்டும். அப்­பா­டங்கள் க.பொ.த. (சா/த) பரீட்­சைக்கு ஒரு பாட­மாக பாடத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்டு உயர்­த­ரத்தில் கல்வி பயில்­வ­தற்கு சாதா­ரண தர சித்தி கட்­டா­யப்­ப­டுத்தல் வேண்டும்.
வரு­டாந்த உயர்ச்­சிப்­படி ஆசி­ரியர் சேவை தரம் 3க்கு 300ரூபாவும், தரம் 2க்கு 600ரூபாவும், தரம் 1க்கு 900 ரூபா­வா­கவும் அமை­வ­துடன் 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு- செலவுத் திட்­டத்தில் சகல அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும் 40 வீத சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படல் வேண்டும்.


வரவு- செலவுத் திட்­டத்தில் அதி­க­ரிக்­கப்­படும் கொடுப்­ப­னவில் அடிப்­படைச் சம்­ப­ளத்தில் 50 வீதத்­தையும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்­ப­னவில் 50 வீதத்­தையும் வழங்க ஆவன செய்ய வேண்டும்.


ஆசி­ரி­யர்­களால் வழங்­கப்­படும் சிறிய தண்­ட­னை­களை மாணவர் மத்­தியில் மேற்­கொள்­வ­தற்­காக தற்­போ­தைய சட்டம் தடை­யாக அமை­கி­றது.
மேலும், எதிர்­கா­லத்தில் சமு­தா­யத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது கடி­ன­மாக அமை­வ­தா­கவும் தற்­போ­தைய நடை­மு­றை­யினால் ஆசி­ரியர் மாணவர்களை தண்டிக்க முடி­யாத கார­ணத்­தினால் மாணவர் மத்­தியில் ஒழுக்­கமும் கட்­டுப்­பாடும் சீர்­கு­லை­வ­துடன் எதிர்­கா­லத்தில் ஒழுக்­கக்­கே­டான சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கு தற்­போ­துள்ள நடை­முறை வழிவகுப்பதனால் இந்நடைமுறையினை நிறுத்தி மாணவர் மத்தியில் ஆசிரியர்கள் தண்டிக்கக் கூடியவர்களாக சட்டதிட்டங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் 2014ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்திற்காக நிதித்திட்டமிடல் அமைச்சுக்கு முன்வைத்துள்ள பிரேரணையில் குறிப்பிட்டுள்ளது.
வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 40 வீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் இ. ஜ. ஆ. சங்கம் Reviewed by Admin on October 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.