முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற உடன் நடவடிக்கை:படங்கள் -
முல்லைத்தீவு, கொக்குளாய் பிரதேசத்தில் அத்துமீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண துணை அவைத் தலைவரும் பொறுப்பு நிலை அமைச்சருமான அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதிக்குச் சென்ற வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து,கைத்தொழில்,வர்த்தகம்,வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபையின் துணை அவைத் தலைவரும் புனர்வாழ்வு, இன நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பு நிலை அமைச்சருமான அன்ரனி ஜெயநாதன் ஆகியோர் இது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
குறிப்பாக 1984 ஆண்டுக்கு முன்னர் 32 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 350 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அத்துடன் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி தொழில் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடல்வளம் அழியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையைக் கருத்திற்கொண்டு இனிவரும் காலத்தில் இவ்வாறான தொழில் முறைகளைப் பயன்படுத்தல் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற உடன் நடவடிக்கை:படங்கள் -
Reviewed by Admin
on
October 14, 2013
Rating:
No comments:
Post a Comment