அண்மைய செய்திகள்

recent
-

தத்தளித்த படகிலிருந்து இலங்கையர்கள் மீட்பு

பத்து பெண்கள், 10 சிறு­வர்கள் உள்­ளிட்ட 67 இலங்­கை­யர்­களை இலங்­கைக்கும் மாலை­தீ­வுக்கும் இடைப்­பட்ட ஆழ்­கடல் பரப்பில் தத்­த­ளித்த பட­கி­லி­ருந்து பாது­காப்­பாக மீட்­ட­தாக கடற்­ப­டையின் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் கோசல வர்­ண­கு­ல­சூ­ரிய தெரி­வித்தார்.

தென் கடற்­ப­ரப்பில் தென்­மேற்கு திசையில் 200 கிலோ மீற்றர் தொலைவில் மாலை­தீவை அண்­மித்த பகு­தியில் தத்­த­ளித்த ‘தினுஜ புத்தா’ என்ற பட­கி­லி­ருந்­த­வர்­க­ளையே கடற்­ப­டை­யினர் பாது­காப்­பாக மீட்­டுள்­ளனர்.

கடற்­ப­டைக்கு நேற்று முன்­தினம் கிடைத்த தகவல் மூலம் குறித்த பட­கி­லி­ருந்­த­வர்­களை மீட்கும் பொருட்டு கடற்­ப­டையின் ‘சாகரா’ என்ற மீட்­புக்­கப்பல் ஸ்தலத்­துக்கு அனுப்­பப்­பட்­டது.

நேற்று அதி­காலை குறித்த படகை அண்­மித்த கடற்­ப­டையின் மீட்­புக்­கப்பல் இயந்­திரக் கோளாறு கார­ண­மாக தத்­த­ளித்த பட­கி­லி­ருந்த 67 பேரையும் பாது­காப்­பாக மீட்­ட­தாக கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் கோசல வர்­ண­கு­ல­சூ­ரிய தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து கோளா­றான பட­கி­னையும் கரையை நோக்கி கொண்டு வந்த கடற்­ப­டை­யினர் மீட்­கப்­பட்­ட­வர்­க­ளையும் காலி கடற்­படை முகாமுக்கு நேற்று மாலை பாது­காப்­பாக கொண்டு வந்து சேர்த்­தனர்.

இந்த படகில் பய­ணித்­த­வர்கள் அவுஸ்­தி­ரே­லியா நோக்கி பய­ணித்த சட்ட விரோத குடி­யேற்ற வாசிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கும் கடற்படை அவர்களை விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படை த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தத்தளித்த படகிலிருந்து இலங்கையர்கள் மீட்பு Reviewed by Admin on October 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.