அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண சபையின் 2ஆவது அமர்வு நவம்பரில்

வடக்கு மாகாணசபையின் கன்னி அமர்வுகள் இன்று கைதடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடமாகாண சபை கட்டடத்தில் காலை 9.30 மணிக்கு மௌன வணக்கத்துடன் ஆரம்பமானது.

 அதன்படி முதலாவது அமர்வில் தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன. அதில் தவிசாளாராக கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், எதிர்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தினர். 

இதன்போது 30 வருடகால போராட்டம், தமிழ் மக்களின் இழப்புக்கள் , என்பனவற்றினைக் கருத்திற் கொண்டு அபிவிருத்திப் பாதையில் செல்வதற்கும் நீண்டதொரு அரசியல் தீர்வினைப் பெறுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் என்று அனைவரும் தமது உரையில் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து தவிசாளர் தலைமையில் முதலாவது அமர்வு 12 மணிக்கு நிறைவடைய இரண்டாவது அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டது. 


வடக்கு மாகாண சபையின் 2ஆவது அமர்வு நவம்பரில் Reviewed by Admin on October 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.