அண்மைய செய்திகள்

recent
-

மன். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள் 2013.


மன். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள் கல்லூரிமுதலவர் அருட் சகோ . சந்தியாகு  தலைமையில் 02.10.2013 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது 

இந்நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பிரதம விருந்தினராக திரு ஆ. பரமதாஸ் மாவட்ட உதவிச்செயலாளர் மன்னார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. N. ராஜமனோகரன் சமூகசேவைகள் உத்தியோகத்தர் வடமாகாணம் அவர்களும் விசேட விருந்தினராக       திருமதி ஆ. யேசுதாசன் சமூகசேவைகள் உத்தியோகத்தர் மன்னார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இவ்விருந்தினர்கள் முதியோர்கள் சிறப்பாக வரவேற்கப்பட்டு பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் முதியோரின் ஆசிரையும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முதியோருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.





மன். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள் 2013. Reviewed by Author on October 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.