இந்திய மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பு
இலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் இந்திய கடற்கரை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு சற்று தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் இந்த மீனவர்களை ஒப்படைத்ததாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கடல் எல்லையை மீறிய காரணத்தினால் கடற்படையினரால் கைது செய்ப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இந்திய மீனவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் கடற்படைக்குச் சொந்தமான உதார எனும் கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு இந்திய கடற்கரை பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பு
Reviewed by NEWMANNAR
on
November 09, 2013
Rating:
No comments:
Post a Comment