மரித்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து மன்னாரில் திருப்பலி -படங்கள்
மரித்த ஆத்துமாக்கள் தினத்தை நினைவுகூறும்முகமாக மன்னார் பொது சேமக்காலையில் திருப்பலி இன்று மாலை 4:30 மணியளவில் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இத் திருப்பலியை மன்னார் பேராலய பங்குத்தந்தை அருட்பணி பெப்பி சோசை அவர்களின் தலைமையில் அருட்பணி . ரெறன்ஸ் குலாஸ் மற்றும் அருட்பணி யேசுராஜன் சில்வா ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்பு கொடுத்தனர்.
குறித்த திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ,அருட்சகோதரர்கள் இறைமக்கள் ஆகியோர் பங்குபற்றினர்
திருப்பலியின் இறுதியில் அருட்த்தையர்களால் கல்லறைகள் ஆசிர்வதிக்கப்பட்டது.
இறையடியார்கள் இறந்த உறவுகளின் கல்லறையில் மெழுகுவர்திகள் ஏற்றி தமது அஞ்சலிகளை செலுத்தி இறைவனிடம் அவர்களின் ஆன்மசாந்திக்காக பிராத்தனை செய்தனர்
மரித்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து மன்னாரில் திருப்பலி -படங்கள்
Reviewed by Author
on
November 02, 2013
Rating:
No comments:
Post a Comment