வடமாகாணசபையின் இரண்டாவது அமர்வு நாளை.
வட மாகாண சபையின் இரண்டாவது அமர்வு நாளை திங்கட்கிழமை காலை 8.30
மணிக்கு சபைமுதல்வர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில்கூடவுள்ளது .
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அழைப்பிற்கமைய சம்பிரதாய பூர்வமாக வடமாகாண ஆளுனர் ஜீ.எ. சந்திரசிறி சம்பிரதாய பூர்வமாக கலந்து கொளவதறக்காகவும் விடப்பட்ட அழைப்பிறக்க இணங்க வட மாகாண சபையின் ஆளுனர் கலந்து கொள்ளவுள்ளதுடன் சபையில் தனது கன்னி உரையையும் ஆற்றவுள்ளார் .
தொடர்ந்து முதலமைச்சர் உரையும் சபையின் முதல்வர் உரையும் இடம் பெற்று தேனீர் இடைவேளை விடப்படும் .
அதனைத் தொடர்ந்து சபை உறுப்பினாகளுக்கான உரையாற்றும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளன .
கடந்த அமர்வில் சபையின் உறுப்பினாகளில் 17 பேர் உரையாற்றியுள்ள நிலையில் ஏனைய அங்கத்தவாகள இரண்டாம் அமர்வில தமது கன்னி உரைகளை ஆற்றவுள்ளாகள் .
இந்த அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான வடக்கின் அமைச்சரவைக் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் முதலமைச்சர் தலைமையில் யாழில் நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
வடமாகாணசபையின் இரண்டாவது அமர்வு நாளை.
Reviewed by Author
on
November 10, 2013
Rating:

No comments:
Post a Comment