அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு.

மன்னார் முருங்கன் பகுதியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாட்களுக்கு வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ . கயஸ் பல்டானோ இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார் .

 மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் கடந்த புதன் கிழமை மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைது செய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் . முருங்கன் பொலிஸார் விசாரனைகளின் பின் குறித்த மூவரையும் மறுதினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் . குறித்த மூன்று பேரும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும் , இன முரண்பாட்டிற்கு வழியமைக்கும் வகையிலும் முருங்கன் பகுதியில் மாவீரர் தினம் என எழுதியதாக கூறி இவர்களை மன்றில் ஆஜர் படுத்தினர் . 

 இதன் போது மன்னார் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் குறித்த 3 சந்தேக நபர்களையும் தங்களுடைய தடுப்பில் வைத்து 72 மணித்தியாலங்கள் மேலதிக விசாரனைக்கு உற்படுத்த வேண்டும் என மன்னார் பதில் நீதவான் இ . கயஸ் பல்டானோ வின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் . இந்த நிலையில் குறித்த 3 நபர்களையும் இன்று ஞாயிற்றுக்கிமை வரை 72 மணித்தியாலங்கள் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள பதில் நீதவான் அனுமதி வழங்கினார் . 

 இந்த நிலையில் குறித்த 3 பேரும் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது தொடர்ந்தும் குறித்த மூன்று பேரிடமும் விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும் என வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் . 

 . இந்த நிலையில் குறித்த மூன்று பேரையும் எதிர்வரும் 14 தினங்கள் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு மன்னார் பதில் நீதவான் இ கயஸ் பல்டானோ அனுமதி வழங்கினார் . குறித்த மூன்று பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துமாறும் உத்தரவிட்டார் .
மன்னாரில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு. Reviewed by NEWMANNAR on December 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.