முல்லைத்தீவு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு கடற் பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு திருகோணமலை பதில் நீதவான் திருநாவுக்கரசு திருச்செந்தில்நாதன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 படகுகளில் இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டபோது கைதான இந்த மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை இரவு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் இந்த மீனவர்களின் 15 படகுகளையும் நல்ல நிலையில் பேணுமாறும் பிடிக்கப்பட்ட மீன், இறால் மற்றும் நண்டு ஆகியவற்றை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை திருகோணமலை நீதிமன்றில் கையளிக்குமாறும் கடற் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் நீதவான் உத்தரவிட்டார்.
முல்லைத்தீவு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:

No comments:
Post a Comment