அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புதை குழியில் தமிழ் மக்களே புதைக்கப்பட்டிருக்க வேண்டும், இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் : விஜித ஹேரத்

மன்னார் புதை­கு­ழியில் தமிழ் மக்கள் புதைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இவர்கள் இரா­ணு­வத்­தி­னரால் கொல்­லப்­பட்­டி­ருக்க வேண்டும் என்றே நாமும் சந்­தே­கப்­ப­டு­கின்றோம் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.


வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தினர் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்­களை செய்­கின்­றனர் என்­பதை சர்­வ­தேசம் புரிந்­து­கொள்ள வேண்டும். இல்­லையேல் வடக்கில் ஒட்­டு­மொத்த தமி­ழர்­களும் அழிந்து விடு­வார்கள் எனவும் அக்­கட்சி எச்­ச­ரித்­துள்­ளது.

மன்னார் புதை­குழி சம்­பவம் தொடர்பில் வின­விய போதே மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்;
மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் மனித புதை­குழி சம்­பவம் இன்று இலங்­கையில் மட்­டு­மின்றி சர்­வ­தேச ரீதியில் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இன்றும் தொடர்ந்து எலும்­புக்­கூ­டுகள் கிடைத்த வண்­ணமே உள்­ளன. இன்னும் பல எலும்­புக்­கூ­டுகள் எடுக்­கப்­ப­டலாம். எனினும், இச்­சம்­பவம் தொடர்பில் நாம் கேட்­ப­தெல்லாம் இதை யார் செய்­தார்கள் என்­பதே. யுத்த கால­கட்­டத்­திற்கு முன்னர் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் அவை தொடர்பில் அர­சாங்கம் ஆதா­ரங்­களை முன்­வைத்­தி­ருக்கும். எனினும், இவ் திருக்­கே­தீஸ்­வரம் புதை­குழி சம்­பவம் தொடர்பில் அர­சாங்கம் ஏன் இன்­னமும் மெளனம் காக்­கின்­றது? இன்று ஜெனீவா மனித உரி­மைகள் மாநாடு நடை­பெ­ற­வி­ருக்கும் கால கட்­டத்தில் நாட்டில் இவ்­வா­றான அதிர்ச்சித் தக­வல்கள் வெளி வரு­வ­தா­னது அர­சாங்­கத்தின் மீதான அழுத்­தங்­க­ளையே அதி­க­ரிக்கும்.

மேலும், மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் புதை­குழி சம்­ப­வத்தில் தமி­ழர்­களே கொல்­லப்­பட்­டி­ருக்க வேண்டும். மன்னார் மாவட்­டத்­தினை நீண்ட கால­மா­கவே இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்­துள்­ளனர். எனவே இங்கு வேறு எவரும் இவ்­வா­றா­ன­தொரு செயலை செய்­தி­ருக்­கக்­கூ­டிய வாய்ப்­புகள் உள்­ளதா என்­ப­திலும் சந்­தே­கமே? எவ்­வா­றெ­னினும் இந்த புதை­குழி சம்­பவம் தொடர்பில் அர­சாங்கம் விரைவில் உண்­மைத்­தன்­மை­யினை வெளிப்­ப­டுத்த வேண்டும். இல்­லையேல் இவ் இனப்­ப­டு­கொ­லை­யினை இரா­ணு­வத்­தினர் செய்­துள்­ளனர் என்ற முடி­வினை எடுக்க நேரிடும். யுத்த வெற்­றி­யினை கண்டு நாட்டில் அமை­தி­யையும், சமா­தா­னத்­தி­னையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக குறிப்­பிடும் அர­சாங்­கமும் இரா­ணு­வத்­தி­னரும் வடக்கில் இனப் படு­கொ­லை­யினை செய்தே யுத்­தத்­தினை முடித்­துள்­ளனர் என்ற நிலை இலங்­கையில் உரு­வாக்­கப்­படும். நாமும் இன்று அர­சாங்­கத்­தையும் இரா­ணு­வத்­தி­ன­ரை­யுமே சந்­தே­கப்­ப­டு­கின்றோம். எனவே, இவை தொடர்பில் எழுந்­துள்ள கேள்­வி­க­ளுக்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக உண்­மை­யான பதி­லினைக் குறிப்­பிட வேண்டும்.

மேலும், யுத்தம் முடிந்து பல ஆண்­டுகள் கடந்த நிலையில் இன்றும் வடக்கில் இரா­ணுவ பலமே காணப்­ப­டு­கின்­றது. வடக்கு மக்கள் மீதான கட்­டுப்­பா­டு­க­ளையும், அடக்கு முறை அரா­ஜக செயற்­பா­டு­க­ளையும் வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர். பொது­மக்­களின் இடங்கள், சொத்­துகள் இன்று இரா­ணுவ கட்­டுப்­பாட்டின் கீழேயே உள்­ளன. பாது­காப்பு வல­யங்கள் நாளுக்­குநாள் அதி­க­ரிக்­கின்­றதே தவிர குறை­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இவை தொடர்பில் இலங்­கையில் இருந்து புதி­தாக எவரும் அறிக்கை சமர்ப்­பிக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. சாதா­ர­ண­மாக இலங்கைக்கு சுற்­றுலா விஜ­யத்­தினை மேற்­கொள்ளும் வெளி­நாட்­ட­வர்கள் இயல்­பா­கவே புரிந்து கொள்வார்கள்.
அதேபோல் வடக்கில் உள்ள இராணுவத்தினரை கட்டுப்படுத்தாவிட்டால் வடக்கில் தமிழ் இனம் இருக்காது. இவை தொடர்பில் சர்வதேசத்திடமோ, மனித உரிமைகள் அமைப்பினரிடமோ தெரிவிக்கப்பட வேண்டும். நாட்டில் அனைத்து மக்களையும் சம உரிமையில் நடாத்தும் ஆட்சியினை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் புதை குழியில் தமிழ் மக்களே புதைக்கப்பட்டிருக்க வேண்டும், இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் : விஜித ஹேரத் Reviewed by NEWMANNAR on January 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.