அண்மைய செய்திகள்

recent
-

நல்லாட்சிக்கு பொறுப்புக்கூறலும் வெளிப்படைத் தன்மையும் அவசியம்!- வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

நல்­லாட்சி என்று கூறும் போது அங்கு பொறுப்­புக்­கூ­றலும் வெளிப்­ப­டைத்­தன்­மையும் இன்­றி­ய­மை­யா­த­து. எமது சுய­ ந­லத்­திற்­காக எமது பத­வி­களை நாம் உப­யோ­கிக்க முற்­ப­டு­வோ­மாகில் அங்கு எமது சுய­ந­லத்­திற்கும், பொது­ந­லத்­திற்கும் இடையில் முரண்­பாடு ஏற்­ப­டு­கின்­றது. இப்­பேர்ப்­பட்ட முரண்­பாடு தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சீ.வி. விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். 

வட மாகாண சபைக்­குட்­பட்ட திணைக்­க­ளங்­களில் செய­லா­ளர்கள், பணிப்­பா­ளர்கள், அதி­கா­ரிகள் உள்­ளிட்­ட­வர்­களை வட­மா­காண உள்­ளூ­ராட்சித் திணைக்­க­ளத்தில் நேற்று முதன்­மு­றை­யாகச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய ­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நான் பத­வி­யேற்ற பின் உங்கள் யாவ­ரையும் அழைத்து ஒரு­மித்து வைத்துக் கூட்டங் கூடு­வது இதுவே முதற் தடவை. சில­ருக்கு எது­வுமே நேரஞ் சென்று தான் நடக்கும். ஜே.ஆர்.ஜய­வர்த்­தன சுமார் நாற்­பது வருட அர­சி­யலின் பின்னர் தான் பிர­தம மந்­தி­ரி­யாகிப் பின்னர் ஜனா­தி­ப­தி­யானார்.

அதே போல்தான் வாழ்க்­கையின் கடைசிக் காலத்­தில்தான் அர­சியல் என்னை வந்­த­டைந்­தி­ருக்­கின்­றது. என் நட­வ­டிக்­கை­களும் தாம­த­மா­கியே விருத்­தி­ய­டை­வதை நான் அவ­தா­னித்­துள்ளேன். உங்­களை அழை­யா­தி­ருந்­தது ஒரு குற்­றந்தான் என்­றாலும் பல நட­வ­டிக்­கை­களை நான் எடுத்த பின் உங்­க­ளுடன் இன்று கூடிக் கதைப்­பது பொருத்தம் என்றே நான் கரு­து­கின்றேன்.

வேலைக்குப் புதி­யவன் என்ற முறையில் பல­தையும் அவ­தா­னித்துப் புரிந்து கொள்ள எனக்கு இந்தக் கால அவ­காசம் இட­ம­ளித்­தி­ருந்­தது. இன்று நீங்கள் கூறும் விட­யங்­களைக் கிர­கித்துக் கொள்ளும் அள­வுக்கு மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் அதே தகை­மையைப் பெற்­றி­ருந்­தேனோ என்­பது சந்­தே­கந்தான்.

போர்க்­கா­லத்தின் போது பல வரு­ட­காலம் உங்கள் கட­மை­களில் ஒரு வித தேக்கம் காணப்­பட்டு வந்­தது. ஆகவே போதிய அறிவை, அனு­ப­வத்தை நீங்கள் யாவரும் உங்கள் கட­மை­களில் பெற்­றி­ருப்­பீர்கள் என்று எவரும் எதிர்­பார்க்க முடி­யாது. அதனால் பர­வா­யில்லை. உங்கள் தகை­மை­களை, அனு­ப­வங்­களை, கட­மை­களை விருத்­தி­ய­டையச் செய்து உங்­களை நல்ல நிர்­வா­கஸ்­தர்­க­ளாக ஆக்­கு­வ­தற்கு ஆவன செய்ய நான் கட­மைப்­பட்­டுள்ளேன்.

நீங்கள் ஒன்றை மட்டும் முக்­கி­ய­மாகக் கருத்­துக்கு எடுக்க வேண்டும். நாங்கள் மக்கள் சேவ­கர்­களே அன்றி மக்­களை ஆட்சி செய்ய வந்­த­வர்கள் அல்ல. முதலில் ஆங்­கி­லேயர் ஆட்­சியின் கீழ் ஆண்டான் அடிமை போன்ற ஒரு உறவு அரச அலு­வ­லர்­க­ளுக்கும், மக்­க­ளுக்கும் இடையில் இருந்து வந்­தது. சுதந்­திரம் கிடைத்த பின்னர் கூட அப்­பேர்ப்­பட்ட ஒரு உற­வையே நாங்கள் தொடர்ந்து பாது­காத்து வந்­தி­ருந்தோம்.

இது தவறு என்று நாங்கள் அப்­போது நினைக்­க­வில்லை. பின்னர் இயக்­கங்கள் இட்ட கட்­ட­ளை­களை நிறை­வேற்றும் போதும் மேலி­ருந்து கீழ் நோக்கி இடப்­பட்ட கட்­ட­ளை­களை நிறை­வேற்­று­ப­வர்­க­ளா­கவே நாங்கள் தொடர்ந்து கட­மை­யாற்றி வந்­துள்ளோம்.

போர் முடிந்த பின் கூட மறு­ப­டியும் ஒரு ஆண்டான் - அடிமை உற­வு­முறை தொடர்ந்து வந்­துள்­ளதை நான் இந்த மூன்று மாதங்­களுள் அவ­தா­னித்­துள்ளேன். அதி­கா­ரத்­திற்கு அண்­மைத்­தா­ன­வர்கள் தாங்கள் இட்­டதே சட்டம் என்ற அடிப்­ப­டை­யில் தான் நிர்­வாகம் நடந்து வந்­துள்­ளது என்று காண்­கின்றேன்.இதில் மாற்றம் ஏற்­பட வேண்டும் என்று நான் எதிர்­பார்க்­கின்றேன்.

எங்கோ வச­தி­யாக என் பாட்டில் இருந்த நான் இன்று வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக மறு அவ­தாரம் பெற்­றுள்ளேன். ஆனால் அதற்குக் காரணம் எங்கள் மக்கள். அவர்­களின் வாக்கு வலி­மையே என்னை இங்கு கொண்டு வந்­துள்­ளது. 
ஆகவே அவர்­களின் எதிர்­பார்ப்­புக்­களைப் பூர்த்தி செய்ய நான் முன் வர­வேண்டும். என்­னுடன் எனக்கு அனு­ச­ர­ணை­யாக நீங்கள் யாவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றேன்.

மற்­றைய மாகா­ண­ச­பை­களில் என்ன விதத்தில் நிர்­வாகம் நடக்­கின்­றதோ நான் அறியேன். ஆனால் நான் இந்தத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரையில் நாங்கள் ஒரே நேரத்தில் மக்கள் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளா­கவும், மக்கள் காவ­லர்­க­ளா­கவும், மக்கள் சேவ­கர்­க­ளா­கவும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றேன்.

பல­வி­த­மான பிரச்­சி­னை­களை எமது மக்கள் எதிர்­நோக்­கி­யுள்­ளார்கள். எமது அர­சியல் பிரச்­சி­னைகள் தீர்ந்­த­பா­டில்லை. போரின் பின்­ன­ரான எமது மக்­களின் வாழ்க்கை முறையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இவை சம்­பந்­த­மா­கவும் பிரச்­சி­னைகள் பல­வற்றை எதிர்­நோக்­கி­யுள்ளோம். அப்­பி­ரச்­சி­னை­களை நாங்­களே தீர்த்துக் கொள்ள முடி­யாத ஒரு நிலை­யில்த்தான் ஜனா­தி­பதியை அணுகி அதற்­கான தீர்­வு­களைப் பெற நான் முயற்­சித்து ஓர­ளவு முன்­னேற்­றமும் கண்­டுள்ளேன்.

இந்­நி­லையில் எமது நிர்­வாக அலகைச் சீருடன் செம்­மை­யாகச், சிறப்­பாகக் கொண்டு நடத்த உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரதும் உத­வி­யையும், அனு­ச­ர­ணை­யையும் நாடி நிற்­கின்றேன். வேலை தெரி­யா­தி­ருப்­பது ஒரு குற்­ற­மில்லை. ஆனால் அதற்­கு­ரிய அறிவைப் பெற எத்­த­னிக்­காது தொடர்­வது ஒரு குற்­றத்­திற்கு ஒப்­பா­னது.

எனவே எமது மக்­களின் ஆணையை நிறை­வேற்ற, எமது தேர்தல் அறிக்­கை­களில் நாங்கள் மக்­க­ளுக்கு எடுத்­து­ரைத்த எமது நோக்­கு­களை முன்­னெ­டுத்துச் செல்ல உங்கள் யாவ­ரதும் ஒத்­து­ழைப்பை நான் நாடு­கின்றேன்.

போரின் பின்னர் கல்வி, சுகா­தாரம், வேளாண்மை, மீன்­பிடி, வணிகம், வியா­பாரம், கூட்­டு­றவு, காணி போன்ற பல­வற்­றிலும் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம். இதை எவ்­வாறு செய்யப் போகின்றோம் என்­பது முக்­கி­ய­மான கேள்வி.

நல்­லாட்சி செய்ய விழை­வதே நாம் நாடக்­கூ­டிய முக்­கி­ய­மான ஒரு எதிர்­பார்ப்பு. நல்­லாட்சி என்று கூறும் போது அங்கு பொறுப்­புக்­கூறல் அவ­சி­ய­மா­கின்­றது. வெளிப்­ப­டைத்­தன்மை இன்­றி­ய­மை­யா­த­தா­கின்­றது. எமது நலன்­களில் முரண்­பாட்டுத் தன்மை ஏற்­ப­டாமல் பார்த்துக் கொள்­வது அவ­சி­ய­மா­கின்­றது.

அதா­வது எமது சுய­ந­லத்­திற்­காக எமது பத­வி­களை நாம் உப­யோ­கிக்க முற்­ப­டு­வோ­மாகில் அங்கு எமது சுய­ந­லத்­திற்கும், பொது­ந­லத்­திற்கும் இடையில் முரண்­பாடு ஏற்­ப­டு­கின்­றது. இப்­பேர்ப்­பட்ட முரண்­பாடு தவிர்க்­கப்­பட வேண்டும். மேலும் நாம் ஒருங்­கி­ணைந்து பொறுப்புக் கூற முன்­வர வேண்டும்.

ஒருவர் மேல் இன்­னொ­ருவர் பழியைப் போட்டுத் தப்­பிக்கப் பார்க்­காமல் எமது பொறுப்பு கூட்­டான பொறுப்பு என்­பதை நாம் உணர்ந்து செயற்­பட வேண்டும். எந்­நே­ரத்­திலும் நேர்­மையும், நம்­ப­கத்­தன்­மையும், பார­பட்­ச­மின்­மையும் எமது நட­வ­டிக்­கை­களில் புலப்­பட வேண்டும்.

இதை நான் ஏன் கூறு­கின்றேன் என்றால் மக்கள் எம்மைப் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மக்கள் எம்­மிடம் பல­தையும் எதிர்­பார்க்­கின்­றார்கள். சென்ற மூன்று மாதங்­களில் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள், சிறைக்குச் சென்று வந்த மக்கள், போரினால் பல­தையும் இழந்த மக்கள், பரி­தா­ப­க­ர­மான நிலையில் உழலும் மக்கள் என்று பலரும் என்­னிடம் வந்து தமது குறை­களைக் கூறி­னார்கள்.

அவர்கள் குறை­க­ளுக்குத் தீர்வு காண்­பது என்றால் நாங்கள் கூட்­டாக உழைத்து அவர்­க­ளுக்குத் தீர்­வு­களைக் பெற உதவி செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் எங்­களை மாற்றிக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. இது­வரை காலமும் நாம் எப்­படி வாழ்ந்து வந்தோம் என்­பது அவ­சி­ய­மில்லை. ஆனால் இனி எவ்­வாறு நடந்து கொள்ளப் போகின்றோம் என்­பது முக்­கியம்.

நீதி­ப­தி­யாகத் தொடர்ந்து 25 வருட காலம் பதவி வகித்­த­தனால் எனது எதிர்­பார்ப்பு மற்­றைய நிர்­வா­கி­களில் இருந்தும் வித்­தி­யா­ச­மாக இருக்க முடியும் என்­பதை நான் உணர்ந்து கொள்­கின்றேன். ஆனால் எனது எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்­பார்க்­கின்றேன். என்ன அந்த எதிர்­பார்ப்பு என்று நீங்கள் கேட்கக் கூடும்.

பொது­மக்கள் சார்­பான பத­விகள் அனைத்தும் எம்மேல் சுமத்­தப்­பட்ட அல்­லது திணிக்­கப்­பட்ட ஒரு நம்­பிக்கைப் பொறுப்பு என்­பதே எனது கருத்து. மக்­களின் நலன் நாடி நடந்து கொள்­வதே நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் கடமை. எனவே மக்­களின் அவ­லங்­களை, தேவை­களை, குறை­களை, எதிர்­பார்ப்­புக்­களை எவ்­வாறு தீர்க்­கலாம் என்­பதில் எமக்கு புதிய புதிய உத்­தி­களும், பொறி­மு­றை­களும் உதிக்க வேண்டும்.

சட்­டத்தின் உக்­கி­ரத்தைத் தணித்துக் கூட எவ்­வாறு மக்கள் நலன்­களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்­பதில் நாங்கள் கரி­சனை எடுக்க வேண்டும். அதைச் செய்ய முடி­யாது, இதைச் செய்ய முடி­யாது, சட்­டத்தில் இட­மில்லை என்று இலே­சாகக் கூறி வாழா­தி­ருக்­காது மக்­க­ளுக்குத் தேவை­யான ஆனால் சட்­டப்­படி எதிர்­பார்க்­கக்­கூ­டிய நல­உ­ரித்­துக்­களைப் பெற்றுக் கொடுக்க நாங்கள் முன்­வர வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் உங்கள் கட­மை­களில் நீங்கள் முழுத் தேர்ச்சி பெற, முதிர்ச்சி பெற எப்­பேர்ப்­பட்ட பயிற்­சி­களும், படிப்­பி­னை­களும் பெற வேண்­டுமோ அவற்றை உங்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க நான் ஆவன செய்வேன். உங்கள் பத­வி­களில் நீங்கள் முன்­னேற்றங் காண ஆவன செய்வேன்.

ஆகவே எந்த நேரத்­திலும் உங்­களில் எவரும் என்­னுடன் வந்து உங்கள் குறை­களை, எதிர்­பார்ப்­புக்­களை பகிர்ந்து கொள்­ளலாம். எனக்கு சாதி, குலம், மதம், இனம் எது­வுமே முக்­கி­ய­மல்ல. உங்கள் மனி­தத்­துவம் மட்­டுமே முக்­கியம். உங்­க­ளுக்குள் பிரி­வி­னைகள் பல இருக்­கக்­கூடும். என்னைப் பொறுத்­த­வ­ரையில் உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரையும் சகோ­த­ரத்­து­வத்­துடன் தான் நான் நடத்­துவேன்.

நான் புரட்­சி­களைக் கொண்­டு­வரப் பார்க்­கின்றேன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நான் கொழும்பில் பிறந்து வளர்ந்­தவன். வெவ்­வேறு வித­மான மனி­தர்­க­ளையும் மனி­தர்­க­ளாகப் பார்த்துப் பழ­கி­ய­வனே அன்றி சாதி, மத, இன அடிப்­ப­டையில் பார்த்துப் பழ­கா­தவன். ஆகவே இந்தப் பேதங்­களை அனு­ச­ரித்து வந்­த­வர்கள் தய­வு­செய்து நான் கட­மையில் இருக்கும் வரையில் ஓர­ளவு விட்டுக் கொடுப்­புடன் நடந்து கொள்­ளு­மாறு உங்­களைக் கேட்டுக் கொள்­கின்றேன்.

எந்­த­விதப் பாகு­பா­டு­மின்றி ஒரு புதிய சமு­தா­யத்தை கட்டி எழுப்ப நாங்கள் முன்­வர வேண்டும். நடந்­தது நடந்து முடிந்­து­விட்­டது. நடக்கப் போகின்­றது நல்­ல­தாக அமைய உங்கள் ஒத்­து­ழைப்புத் தேவை. இது­வரை காலமும் எம்மால் முடி­யாது என்­றி­ருந்த நாம், இனி­யா­வது ஏதோ விதங்­களில் எம்­மக்­களின் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

எமது தமிழ் மக்கள் பிற­நா­டு­களில் போய் எவ்­வ­ளவு சிறப்­பாக வாழ்­கின்­றார்கள் என்­பதை மறக்­கா­தீர்கள். அதே மக்கள் தானே நாங்­களும். எமக்கு ஏன் எம்மை முன்­னேற்றி இந்த நாட்­டினுள் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது? முயன்றால் முடியும் என்­பதே என் முடிவு.

முதன்­மு­த­லாக எமது மக்கள் எம்மை ஏகோ­பித்த விதத்தில் பத­வியில் ஏற்­றி­யுள்­ளார்கள். நாம் அவர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்­டி­யவை பல­வுண்டு. எமது சூழல், சுற்­றாடல், பிர­தேசம், மாகாணம் என்று பல­வி­தங்­களில் அவற்றில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த நாம் கட­மைப்­பட்­டுள்ளோம். அதற்கு அலு­வ­லர்­க­ளா­கிய நீங்கள் அனு­ச­ர­ணை­க­ளாக இருக்க வேண்டும். முட்­டுக்­கட்­டை­க­ளாக இருக்கக் கூடாது.

எமது மக்கள் பல­வி­தங்­களில் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். உள்­ளத்தால், உடலால், அறிவால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களின் வாழ்க்­கையை நாங்கள் தான் நல்ல நிலைக்குக் கொண்டு வர உதவ வேண்டும். எந்த நேரமும் அந்த மக்­களின் முன்­னேற்­றமே எமது கரி­ச­னை­யாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்­கின்றேன்.
நல்லாட்சிக்கு பொறுப்புக்கூறலும் வெளிப்படைத் தன்மையும் அவசியம்!- வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் Reviewed by NEWMANNAR on January 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.