பிழையான தரவுகளுடன் நாட்டில் 150,000 அடையாள அட்டைகள்
நாட்டில் சுமார் 150,000 அடையாள அட்டைகள் பிழையான தரவுகளை கொண்டிருக்கின்றன. இதன்காரணமாக இந்த அடையாள அட்டைகளை கொண்டிருப்போர் வங்கிக்கடன் உட்பட்ட பல விடயங்களில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமது அடையாள அட்டைகளில் தவறுகள் இருக்கும் விடயம் தெரியப்படுத்தப்படுமானால் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித வலுக்கள் காரணமாகவே இவ்வாறான தவறுகள் நேருகின்றன. விரைவில் அடையாள அட்டை தயாரிப்புக்கள் யாவும் கணணி மயப்படுத்தப்படும் போது இந்த தவறுகள் நீக்கப்படும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பிழையான தரவுகளுடன் நாட்டில் 150,000 அடையாள அட்டைகள்
Reviewed by Admin
on
January 05, 2014
Rating:

No comments:
Post a Comment