அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரத்தில் மேலும் ஒரு எலும்புகூடு கண்டெடுப்பு -படங்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியை எட்டாவாது நாளாக இன்று அகழ்வு செய்தபோது ஒரு மண்டை ஓடு மற்றும் சில தடயப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் தொகை முப்பத்N;தழாக அதிகரித்துள்ளது.

      அத்துடன் பெண்கள் கழுத்தில் அணியும் முத்து மாலைக் குண்டுகளும் அதேபோன்று கையில் அணியும் வளையல்களின் துண்டுகள் சிலவும் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

          கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ந் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர பிரிவிலுள்ள மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி இன்று (17.01.2014) வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்தின தலைமையில் எட்டாவது நாளாக காலை 8.30 மணி தொடக்கம் மாலை 1 மணி வரை இவ் மனித புதைகுழி அகழ்வு வேலை இடம்பெற்றது.

இதன்போது குறித்த பகுதியிலிருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்நிலையில்  மேலும் மனித எச்சங்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நாளை சனிக்கிழமை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.






















திருக்கேதீஸ்வரத்தில் மேலும் ஒரு எலும்புகூடு கண்டெடுப்பு -படங்கள் Reviewed by Author on January 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.