அண்மைய செய்திகள்

recent
-

அனந்தி சசிதரனை அச்சுறுத்துவதை விடுத்து அவரின் கோரிக்கைகளை அரசு புரிந்துகொள்ள வேண்டும். சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அனந்தி சசிதரன் தனது கணவரைத் தேடியும் அதே போன்று தனது பிள்ளைகளை இழந்து

கணவரை இழந்து நிர்க்கதியாக நிற்கும் பெண்களுக்காக குரல் கொடுப்பதையும் போராடுவதையும் யாரும் பிழையென்று கூற முடியாது . இது அவரது கடமையும் உரிமையும் ஆகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஊடக மையத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து அவர் கருத்துக் கூறுகையில் அனந்தி சசிதரன் ஜனநாயக பூர்வமாக தனது கருத்துக்களை பாதிக்கப்பட்ட தனது மக்களுக்கான கருத்துக்களை இங்கும் சரி வெளிநாடுகளிலும் சரி சொல்வதற்கு சகல உரித்தும் உடையவர் .

அவர் ஒரு பெண் என்பதற்காக அவரை மிரட்டி உருட்டி பணியவைக்க முயற்சிப்பதும் அவரை அச்சுறுத்துவதும் முழுக்க முழுக்க ஐனநாயக விரோத செயற்பாடும் அவரது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடும் ஆகும் .

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில தினசரி ஒன்று தனது தலைப்புச் செய்தியில் பாதுகாப்பு அமைச்சசை மேற்கோள் காட்டி அனந்தி சசிதரன் அவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு நிலையத்திறக்கு அனுபப்பப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்பான விசாரனைகள் நடைபெறுவதாகவும் அவருடைய கணவர் எழிலன் ( சசிதரன் ) திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த காரணத்தினால் இவரையும் புலி என்ற ஒரு முத்திரையை குத்தி எந்நேரமும் இவர் கைது செய்யப்படலாம் என்ற ஒரு அச்சத்தை அப்பத்திரிகை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறான விசமத்தனமான அச்சுறுத்தக் கூடிய செய்திகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக வன்மையாக கண்டிக்கின்றது .

அனந்தி சசிதரனை அச்சுறுத்துவதை விடுத்து அவரின் கோரிக்கைகளின் நியாயங்களை புரிந்துகொண்டு அவரது கணவர் உட்பட காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற் கொள்ள வேண்டும் .

அதனை விடுத்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்வதானது மேலும் மேலும் இனங்களுக்கு இடையில் விரிசல்களையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும் என்பதையும் சம்பந்தப்பட்டோர் உணர்ந்து கொள்ள வேண்டும் .

உங்களது செயற்பாடுகளால் நீங்களே உங்கள் தலையில் மண்னை வாறி இறைத்துக் கொள்கின்றீர்கள் . மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை அதிலும் வட மாகனாண சபைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்ற வேட்பாளர் .

இத்தகையவரை அச்சுறுத்துவதும் கைது செய்ய முற்படுவதும் அவாகளது ஜனநாயக மற்றும மனித உரிமைகளை மீறுவதும் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கக் கூடிய செயற்பாடுகள் அல்ல . எனவே இவ்வாறான முட்டாள்தனமான அச்சுறுத்தல் நடவடிக்கைகளை படையினரும் புலனாய்வாளர்களும் அரசாங்கமும் கைவிட்டு தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்கள் சம உரிமையுடனும் சம அந்தஸ்துடனும் வாழ்வதற்கு வழியேற்படுத்த இலங்கை அரசு முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .
அனந்தி சசிதரனை அச்சுறுத்துவதை விடுத்து அவரின் கோரிக்கைகளை அரசு புரிந்துகொள்ள வேண்டும். சுரேஸ் பிரேமச்சந்திரன். Reviewed by Author on January 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.