அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: சந்தேக நபர் கைது-படங்கள் ,காணொளி இணைப்பு

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக வர்ணம் பூசும் ( பெயின்டர்) தொழில் ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் இன்றுக்காலையிலேயே வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டின் முன் வாயிலை திறந்துகொண்டு உள்நுழைகையில் ஊடகவியலாளர் அவரை இனங்கண்டு கொண்டதையடுத்தே தன்னிடமிருந்த கத்தியால் ஊடகவியலாளரை குத்தியதுடன் வீட்டிலிருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் அல்லது பக்கத்து வீடுகளில் சில நாட்கள் வேலைக்கு சென்றிருக்கலாம் என்றும் இன்று, வீட்டார் தேவாலயத்திற்கு சென்றதை நன்றாக தெரிந்து வைத்திருந்தே இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரூபா 1200 உம், கையடக்க தொலைப்பேசியும் களவெடுத்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ள போதிலும் அதற்கு கூடுதலான தொகையை அவர் திருடியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த நபர் ஹங்வெல்லவிற்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் கைது செய்யப்படும்போது நன்றாக மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வீட்டுக்குள் நுழையும் விதம் மற்றும் வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்த வீட்டில் மற்றும் பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களில் பதியப்பட்டுள்ள காட்சிகளை வைத்தே சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.







ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: சந்தேக நபர் கைது-படங்கள் ,காணொளி இணைப்பு Reviewed by NEWMANNAR on February 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.