அண்மைய செய்திகள்

  
-

முருங்கனில் பசியினால் உணவை திருடி உண்ட சிறார்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பரிதாபம்

நேற்று வியாழக்கிழமை நடந்த பரிதாப சம்பவமொன்று முருங்கன் பொலிசாரூடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.முருங்கன் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் தனது வீட்டில் அருந்து வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த வேளையில் தனது வீட்டில்ருந்து சுமார் 13 வயதுடைய மூன்று சிறுவர்கள் ஓடுவதை அவதானித்துள்ளார்.

ஓடிய மூன்று சிறுவர்களும் அயலில் வசிப்பவர்கள் என்பதை அடையாளங் கண்டு கொண்ட அந்த நபர் தனது வீட்டினுள் சென்று பார்த்த போது வீடு அலங்கோலமான நிலையில் இருந்ததைக் கண்டு முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு உடனே சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பின்னர் பொலிசார் குறித்த மூன்று சிறுவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளனர்.
அதன் போது குறித்த மூன்று சிறுவர்களும் கடும் பசி காரணமாக உண்பதற்கோ அல்லது குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்காதா எனத் தேடியே அவ் வீட்டினுள் புகுந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

பொலிசாரின் விசாரணையின் போது அவ்வாறு பல வீடுகளில் தாங்கள் திருடியதை சிறுவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கடந்த கால யுத்தத்தின் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக சென்று மீளவும் இலங்கைக்கு வந்ததாகவும் தமது பெற்றோருக்கு நிரந்தர தொழில் இல்லாமையால் தாங்கள் பசியால் வாடுவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து முருங்கன் பொலிசார் குறித்த சிறுவர்களையும் பெற்றோர்களையும் மன்னார் நீதிமன்றில் நேற்று(27) ஆஜர் படுத்தினார்.

குறித்த சிறுவர்களின் பெற்றோரை எச்சரித்த நீதிமன்றம் சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கியதுடன் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரை சிறுவர்களை மேற்பார்வை செய்யுமாறும் அவர்கள் தொடர்பான பொருத்தமான நடவடிக்கையை அடுத்த தவணையின் போது மன்றில் முன்வைக்குமாறு கூறி சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



முருங்கனில் பசியினால் உணவை திருடி உண்ட சிறார்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பரிதாபம் Reviewed by NEWMANNAR on March 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.