அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்செல்வநாயகம் அவர்களின் 116 ஆவது பிறந்த தின விழா அனுஸ்டிப்பு

ஈழத்துக்காந்தி என்றழைக்கப்படும் தமிழ் தேசியத்தலைவர் அமரர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 116 ஆவது பிறந்த தின விழா இன்று திங்கட்கிழமைமன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. 

மன்னார் மாவட்ட தந்தை செல்வா அறம்காவலர் அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனிமார்க் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலை முன்றலில் காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெறது.

அன்னாரை கௌரவிக்கும் முகமாக அன்னாரது உருவச்சிலைக்கு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,நகர சபை உறுப்பினர் எஸ்.பிரிந்தாவனநாதன், இந்து மத குரு ஐங்கர சர்ம ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் விசேட உரைகளும் இடம் பெற்றது
மன்னாரில்செல்வநாயகம் அவர்களின் 116 ஆவது பிறந்த தின விழா அனுஸ்டிப்பு Reviewed by NEWMANNAR on March 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.