இலங்கையை வந்தடைந்தது இந்தோனேசிய போர்க் கப்பல்
இந்தோனேசியாவின் போர்க் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நற்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இந்தோனேசிய போ்ர்க் கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 மீற்றல் நீளமுடைய இந்தோனேசிய போர்க் கப்பலில் கடற்படை வீரர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 100 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இலங்கையை வந்தடைந்தது இந்தோனேசிய போர்க் கப்பல்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2014
Rating:

No comments:
Post a Comment