மாயமான மலேசிய விமானம் கடலில் வீழ்ந்துள்ளது, ஒருவரும் உயிர்ப்பிழைக்க வாய்ப்பில்லை – மலேசிய பிரதமர்
காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதை புதிய தகவல்களை உறுதிப்படுத்துவதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
லண்டனின் இம்மர்சாட் செய்திமதி நிறுவனத்தின் தகவல்களின்படி, விமானம் கடைசியாக தென்பட்டது அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்திற்கு மேற்கே இருக்கின்ற கடற்பரப்பில் தான் எனவும், அங்கு தான் காணாமல் போயுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அத்தோடு விமானத்தில் இருந்த 239 பேரில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும், விமானத்தில் இருந்தவர்களின் உறவினர்களிடம் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய பிரதமர் கூறியுள்ளார்.
BBC TAMIL
மாயமான மலேசிய விமானம் கடலில் வீழ்ந்துள்ளது, ஒருவரும் உயிர்ப்பிழைக்க வாய்ப்பில்லை – மலேசிய பிரதமர்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2014
Rating:

No comments:
Post a Comment