அண்மைய செய்திகள்

  
-

வடக்கில் கடும் ­வ­ரட்சி. குடிநீருக்காக அலைந்து திரியும் கால்­ந­டை­கள்.

வடக்கில் தற்­பொ­ழுது கடும் ­வ­ரட்சி நில­வு­வதால் தீவுப்­ப­கு­தி­யிலும் கிளி­நொச்­சியில் சில பகு­தி­க­ளிலும் குடி­நீ­ரின்றி பொது­மக்­களும் கால்­ந­டை­களும் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­தாக சூழ­லி­ய­லா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.


இந்த வகையில் நெடுந்­தீவுப் பகு­தியில் தற்­பொ­ழுது நிலவும் கடும் வரட்சி கார­ண­மாக பொது­மக்கள் மட்­டு­மன்றி கால்­ந­டை­களும் நீருக்­காக அலைந்து திரி­வதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.


மேற்குப் பகு­தியில் உள்ள ராசாப்­பிட்டி குடிநீர் விநி­யோகக் கிணறு நீர் மட்டம் குறைந்து காணப்­ப­டு­வ­துடன் அடிக்­கடி நீரி­றைப்­புக்­குள்­ளா­வதால் நீர் உவர்த்­தன்மை கொண்­ட­தாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது.


கடற்­ப­டை­யினர் பொது­மக்­க­ளுக்கு கடல்­நீ­ரி­லி­ருந்து உவர்­நீரை நன்­னீராக மாற்றி வழங்­கி­னாலும் அதனை அனைத்து மக்­களும் போதி­ய­ளவு பெறக்­கூ­டி­ய­தாக இல்லை எனவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. நன்னீர் கிண­று­களும் பாவிக்க முடி­யாத நிலையில் அசுத்­த­மாக காணப்­ப­டு­வ­தா­கவும் இந்தக் கிண­று­களைத் துப்­பு­ரவு செய்து குடி­தண்­ணீரைப் பெறக்­கூ­டிய வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வேண்டும் எனவும் பொது­மக்கள் கோரிக்கை விடுத்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­க­தக்­கது.


இதே­வேளை கிளி­நொச்சி மாவட்­டத்தில் பூந­கரி பிர­தே­சத்தில் கடும் வரட்சி நில­வு­வதால் குடி­நீ­ருக்குப் பெரும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் கால் நடைகள் நீர்­நி­லை­களைத் தேடி அலைந்து திரி­வ­தா­கவும் இப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்.


பூந­க­ரியில் நிலவும் கடும் வரட்­சியைக் கருத்தில் கொண்டு இப்­பி­ர­தேச சபை மக்­க­ளுக்கு குடிநீர் விநி­யோ­கித்து வரு­கின்ற பொழு­திலும் அந்நீர் மக்­க­ளுக்கு போது­மா­ன­தாக கிடைப்­ப­தில்லை எனவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.


இதே­நேரம் பூந­கரி பிர­தே­சத்­தி­லுள்ள குழங்கள், நீர்­நி­லைகள் என்­ப­வற்றில் நீர் வற்­றிய நிலையில் காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் கால்­ந­டைகள் நீரைத் தேடி அலைந்து திரி­கின்­றன. இதனால் கால்­ந­டைகள் இறக்­கின்ற நிலையும் காணப்­ப­டு­வ­தாக மக்கள் தெரி­விக்­கின்­றனர். இதே­வேளை வடக்கில் நிலவும் வரட்­சியால் பல்­வேறு நோய்கள் ஏற்­ப­டக்­கூ­டிய நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் மக்கள் தெரி­விக்­கின்­றனர்.
வடக்கில் கடும் ­வ­ரட்சி. குடிநீருக்காக அலைந்து திரியும் கால்­ந­டை­கள். Reviewed by NEWMANNAR on April 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.