தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் குறித்த 22 இந்திய மீனவர்களையும் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதோடு மீனவர்களின் படகுகளில் இருந்த வலைத்தொகுதிகளையும் மன்றில் ஒப்படைத்தனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ குறித்த மீனவர்களை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு மீனவர்களின் படகுகள் மற்றும் வலைத்தொகுதிகளை பாதுகாக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
June 20, 2014
Rating:
No comments:
Post a Comment