அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

இலங்கை கடற்பரப்பினுள் கடந்த புதன் கிழமை(18) அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். கடந்த புதன் கிழமை இரவு 5 படகுகளில் வருகை தந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து விசாரனைகளின் பின் நேற்று(19) வியாழக்கிழமை மாலை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

 கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் குறித்த 22 இந்திய மீனவர்களையும் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதோடு மீனவர்களின் படகுகளில் இருந்த வலைத்தொகுதிகளையும் மன்றில் ஒப்படைத்தனர்.

 இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ குறித்த மீனவர்களை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு மீனவர்களின் படகுகள் மற்றும் வலைத்தொகுதிகளை பாதுகாக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. Reviewed by NEWMANNAR on June 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.